திருநகர் : திருநகர் சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக ஆலோசனை கூட்டத்தில் பக்தர்கள் திருப்பணிக்கு ரூ. 3 லட்சம் வழங்கினர். இந்த ஆலோசனை கூட்டம் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. அறங்காவலர் சண்முகராஜா, நிர்வாக அலுவலர் ஜவஹர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி, நூலக வாசகர் வட்ட தலைவர் செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் பொன்.மனோகரன், சொக்கலிங்கம், உட்பட பலர் கலந்து கொண்டனர். அறங்காவலர் குழு தலைவர் கூறுகையில் "கோயிலில் 13 ஆண்டுகளுக்கு பின்பு ரூ. 50 லட்சத்தில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
ஆலோசனை கூட்டத்தில் அறங்காவலர்கள் குழு சார்பில் ரூ. 1 லட்சம், சிவன் சன்னதிக்கு அரவிந்த் ரூ. ஒரு லட்சத்து 10 ஆயிரம், நால்வர் சன்னதிக்கு சைவ பெருமக்கள் மன்றம் சார்பில் ரூ. 50 ஆயிரம், விசாலாட்சி சன்னதிக்கு கிருஷ்ணன் ரூ. 10 ஆயிரம், நாகராஜ், கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, சுந்தர் ரூ. 7 ஆயிரத்து 500, ஜெயகாளிதாஸ் ரூ. 10 ஆயிரம் கொடுக்க சம்மதித்தனர். ஹரிகிருஷ்ணன் ரூ.2 ஆயிரம் கொடுத்தார்.
கும்பாபிஷேக திருப்பணிக்கு நன்கொடை கொடுக்க விரும்பும் பக்தர்கள் நிர்வாக அலுவலர், அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில், திருகநர், மதுரை. 625 006 என்ற முகவரியிலும், 98421 45459, 97861 74179 என்ற மொபைல் போனிலும் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment